கோட்டாபய தலைமையில் இனவாத இராச்சியம் உதயம் – மன்னாரில் மனோ கணேசன் விசனம்
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராச்சியம் உருவாகியுள்ளது என மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று மன்னார் பஸ் நிலையத்துக்கு முன்னால் பேரணியில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
“தமிழரும் முஸ்லிமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்து விட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. இது கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணி திரண்டு இருக்கின்றார்கள். துணையாக நான்களமிறங்குகிறேன்” என்றார்.